/* */

நெல்லையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு

நெல்லையில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு
X

நெல்லையில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் இன்று (01.12.2021) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பேசியதாவது :- 2021 ம் வருட எய்ட்ஸ் தினக் கருத்து "உலகளாவிய ஒற்றுமை / பொறுப்பை இப்பேரிடர் காலங்களில் பகிர்ந்து கொள்ளுதல்" (Global Solidarity Shared responsibility) ஆகும். இதன் மூலம் புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாத எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களை புறக்கணிப்பு செய்யாத மற்றும் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பால் இந்திய அளவில் எச்.ஐ.வி/ எய்ட்ஸின் தாக்கம் 57% வரை (15 முதல் 49 வயதினரிடையே) புதிய எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் குறைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2007 ஆண்டில் 1.8% சதவிதமாக இருந்த பாதிப்பு பலதுறைகளின் ஒத்துழைப்பால் 2020 ஆண்டு 0.07% ஆக குறைந்தது. இந்த ஆண்டில் 0.06% ஆக குறைந்துள்ளது. எனவே இனி வருங்காலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைவருடைய ஒத்துழைப்பு மற்றும் பல துறைகளின் செயல்பாடுகளால் எச்.ஐ.வியால் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அல்லது குழந்தைகளே பாதிக்கப்படக் கூடாது என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பேசினார்.

முன்னதாக உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வாசிக்க அனைத்துதுறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக பணியாற்றிய 50 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணலீலா, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிசந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி தலைமை மருத்துவர் மணிமாலா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுண்ணுபிரியல் துறை தலைவர் மரு.பூங்கொடி, டான்சாக்ஸ் திட்ட அலுவலர் ஜெகதீசன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோடல் அலுவலர் மரு. அமுதா, மாவட்ட மேற்பார்வையாளர் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு ஜெயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Dec 2021 11:09 AM GMT

Related News