/* */

நெல்லை சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

திருநெல்வேலி காவல் சரக்கத்தில் 10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நெல்லை சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
X

பைல் படம்.

திருநெல்வேலி காவல் சரக்கத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் உள்ளிட்டவருக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜகுமாரிக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளராகவும், பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர் கோமதி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 May 2023 3:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!