/* */

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஞானதிரவியம் எம்பி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
X

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், (DISHA COMMITTEE) திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், (DISHA COMMITTEE) திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜீ, மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று (11-05-2021) நடைபெற்றது.

இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், பிரதமமந்திரி வீட்டு வசதி திட்டம், துாய்மைபாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை திட்டம், தேசிய சமூக உதவித்திட்டங்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய மின் ஆளுமைத் திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம், ஷியாமபிரசாத் முகர்ஜி ரூர்பன் இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், வேளாண்மைத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை, பிரதம மந்திரி கிராமச் முன்னேற்ற திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் செயல்படுத்திவரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என குழுவின் தலைவர் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தெரிவித்தார். இக்கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் வோளண்மை கஜேந்திரபாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.

Updated On: 11 May 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்