மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரனுக்கு பிரிவு உபசார விழா
மாறுதலாகி செல்லும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்விஷ்ணுசந்திரன் அவர்களுக்கு மைய அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடந்தது
HIGHLIGHTS
நகராட்சி துறை இணை ஆணையாளாராக மாறுதலாகி செல்லும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரனுக்கு மைய அலுவகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரனுக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய மாநகராட்சி அலுவலர்கள் தேர்தல் நேரத்தில் பணிசுமை தெரியாத வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததற்கும், 44 நபர்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தமைக்கும், கீழ்நிலை பணியாளர்களுக்கு தகுந்த நேரத்தில் பணி உயர்வு வழங்கியமைக்கும் தங்களது நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன், கடந்த ஒரு வருடமாக தன்னுடன் சிறப்பாக ஒத்துழைத்து பணியினை செய்த உதவி ஆணையாளர்கள் மற்றும் பணியாளர்களையும் பாராட்டுக்குரியவர்கள். இனி வரும் காலங்களில் உங்களது வேலையினை சிறப்புடனும், கவனத்துடனும் மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில், மாநகர பொறியாளர், 4 மண்டல உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட அனைத்து மண்டல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.