Begin typing your search above and press return to search.
நெல்லையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மூன்று பேர் கைது
நெல்லை மாநகரில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நெல்லை மாநகரம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியின் போது நேற்று சந்திப்பு கெட்வெல் மருத்துவமனை அருகே திருநெல்வேலி மாவட்டம் மலையன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (43) என்பவரிடமிருந்து 19 மது பாட்டில்கள் ரூபாய் 100 பணம், தச்சநல்லூர் புது பாலம் அருகே பேட்டை நல்லையாபுரம் தெருவை சேர்ந்த கண்ணன் (48) என்பவரிடமிருந்து 14 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 100 பணம் பிடித்து மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சட்டவிரோதமாக மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 3 பேரை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 43 மது பாட்டில்கள் மற்றும் ரூ 460/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.