/* */

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது.

HIGHLIGHTS

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
X

போக்சாே வழக்கில் கைது செய்யப்பட்ட பொன் கணேஷ் மற்றும் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப்.

நெல்லையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது.

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த விஎம்.சத்திரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது தாய்- தந்தை இல்லாததால் மேலப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். பாட்டியின் அரவணைப்பில் அங்குள்ள தனியார் பள்ளியில் அச்சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கேடிசி நகரை சேர்ந்த பொன் கணேஷ் (20) என்ற வாலிபருடன் சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியை கட்டாயப்படுத்தி பொன் கணேஷ் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும் தன்னுடன் நெருங்கி பழகும் விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுபோன்ற சூழலில் சிறுமியின் பள்ளியில் பாட்டு வாத்தியாராக பணிபுரிந்து வரும் அருள்ராஜ் ஜோசப்(24) சிறுமியை தொடர்பு கொண்டு அவருக்கு பைக் ஓட்ட கற்று தருவதாக கூறியுள்ளார். ஆசிரியர் என்பதால் அவரை நம்பி சிறுமி அருள்ராஜ் ஜோசப் உடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற போது ரெட்டியார்பட்டி இரட்டை மலை அருகே வைத்து ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பொன் கணேஷிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொன் கணேஷ் ஆசிரியரை தொடர்பு கொண்டு சிறுமி விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பொன் கணேஷ் சிறுமியின் இல்லத்துக்கு அடிக்கடி வருவதை கவனித்த சிறுமியின் பாட்டி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரித்த போது பொன் கணேஷ் மற்றும் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் இருவரும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவம் அண்மையில் அதிகரித்து வரும் சூழலில், நெல்லையில் ஆசிரியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 May 2022 2:02 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு