Begin typing your search above and press return to search.
குடியரசு தின விழா: நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியில் தேசியக்கொடி ஏற்றம்
73 வது குடியரசு தினத்தையொட்டி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை-கணேசராஜா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
HIGHLIGHTS
73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பச்சை கணேசராஜா தேசிய கொடி ஏற்றினார்.
நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளருமான தச்சை. என். கணேசராஜா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வங்கியின் அலுவலர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.