/* */

நெல்லையப்பர் கோயில் ஆனிபெருந்தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில் 516 வது ஆனிபெருந் தோ்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோயில் ஆனிபெருந்தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

நெல்லையப்பர் கோயிலில் இன்று  தேர் திருவிழாவிற்கு கொடியேற்றம் நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தின் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் மிகப் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் மழையினால் நனையாத படி வேலியிட்டுக் காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் வரக் காரணமானவா். பால்குடம் சுமந்து சென்ற இராமக்கோன் என்ற அன்பரை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறிவிட்டு பாலை தன்மேல் கவிழச்செய்து அதனால் வெட்டுண்டு காட்சியருளிய பெருமையுடையதும், திக்கெல்லாம் புகழறும் திருநெல்வேலி என்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையதும், பஞ்ச சபைகளில் தாமிர சபை இங்கு அமைந்திருப்பதும் ஆகிய பற்பல சிறப்புகள் நிறைந்துள்ளது. அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பா் திருக்கோவில். இப்புண்ணிய திருத்தலத்தில் ஆனிபெருந் தோ்த்திருவிழா 48½ நாள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான 516 வது ஆனிபெருந் தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு 515வது தோ்த்திருவிழா நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆனித்தோ் திருவிழா நடைபெறவில்லை.

இதற்காக நேற்று அங்குரார்பணம் நடைபெற்றது. இன்று அதிகாலையில் திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர சுவாமி அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் ஏழுந்தருளினா். கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 08.000 மணிக்கு மேல் 09.00 க்குள் கடக லக்னத்தில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பன்னா்கள் நான்கு வேதம் கூற ஓதுவாமூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசரனைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் சுவாமி- அம்பாள் காலை- மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் வீதிஉலா நடைபெறும். கோயில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு,கர்நாடக இன்னிசை, ஆன்மீகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசைக்கச்சேரி,புராண நாடகம், என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் 516 வது திருத்தேரோட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது. தேர் நிலையை அடைந்த மறுநாள் தீர்த்தவாரியுடன் தேர்த்திருவிழா இனிதே முடிவடையும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Updated On: 3 July 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...