/* */

நெல்லையில் 17 மையங்களில் நீட் தேர்வு: சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

நெல்லையில் நீட் தேர்வு எழுதுவதற்கு வந்த மாணவ- மாணவிகள் கட்டுப்பாடுகளுடன்,வெப்பப் பரிசோதனைக்கு பின்பு தேர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

HIGHLIGHTS

நெல்லையில் 17 மையங்களில் நீட் தேர்வு: சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி
X

நெல்லையில் உள்ள நீட் தேர்வு மையம் ஒன்றில், சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் மாணவர்கள். 

நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 17 தேர்வு மையங்களில் 6996 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள 17 தேர்வு மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 12 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக காலை 10 மணிக்கெல்லாம் மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கினர். வழக்கம்போல் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியவும், நகைகள் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

எனவே தீவிர பரிசோதனைக்கு பிறகு உரிய சமூக இடைவெளியுடன் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 50 மில்லி சானிடைசர் மற்றும் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக தேர்வு மையத்தின் வாசலில் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகக்கவசமும் வழங்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாவட்டமான தென்காசியில், மொத்தம் மூன்று மையங்களில் நீட் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!