/* */

நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி திருவிழா: பரிவேட்டை புறப்பாடு அம்பு போடும் நிகழ்வு

நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி திருவிழாவிற்கு ராமையன்பட்டியில் பரிவேட்டை புறப்பாடு அம்பு போடும் நிகழ்ச்சி.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி திருவிழா: பரிவேட்டை புறப்பாடு அம்பு போடும் நிகழ்வு
X

நெல்லையப்பர் திருக்கோயிலில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று சுவாமி பரிவேட்டைக்காக வெள்ளி குதிரையின் மீது ராமையன்பட்டியில் அம்பு கொடு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி திருவிழாவிற்கு பரிவேட்டை பக்தர்கள் சாமி தரிசனம்.

தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று இரவு நெல்லையப்பர் கோவிலில் இருந்து வெள்ளி குதிரை சப்பரத்தில் நெல்லையப்பர் (சந்திரசேகரர்) வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டியில் சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் நவராத்திரி நிறைவு நாளான 15.10.2021. சுவாமி நெல்லையப்பர்(சந்திரசேகர்) பரிவேட்டைக்காக வெள்ளி குதிரையின் மீது ராமையன்பட்டியில் அம்பு கொடு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சுவாமி திருக்கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Updated On: 16 Oct 2021 1:41 AM GMT

Related News