/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மண்டல மக்கள் நீதி மய்யம் ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருநெல்வேலி மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது; இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மண்டல மக்கள் நீதி மய்யம்  ஆலோசனை
X

நெல்லையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், செயல்பாடுகள், மக்களுக்கான திட்டங்கள் மற்றும் களகருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருநெல்வேலி மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் மௌரியா தலைமையில், தங்கவேலு முன்னிலையில் இக்கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் களப்பணி வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தினர். மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல அமைப்பாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், மண்டலச் செயலாளர் பிரேம்நாத் ஒருங்கிணைத்து செயல்படுத்தினார். மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் உட்பட அனைத்து நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Nov 2021 10:15 AM GMT

Related News