/* */

கல்குவாரி விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் எம்எல்ஏ

அடை மதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

HIGHLIGHTS

கல்குவாரி விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு  நிதி உதவி வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
X

அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் பலியான 3 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் நிவாரண உதவி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் பலியான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட சிங்கநேரி ஊராட்சி இளையார்குளம் செல்வன், அரியகுளம் ஊராட்சி ஆயர்குளம் முருகன், செண்பகராமநல்லூர் ஊராட்சி காக்கைகுளம் செல்வகுமார் ஆகியோர் குடும்பத்தினரை நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து பலியான 3 பேரின் குடும்பங்களுக்கும் அவர் தனது சொந்த நிதியிலிருந்து தலா 10 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் வழங்கினார்.

அப்போது அவருடன் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாமன்ற உறுப்பினர் டவுன் சந்திரசேகர், பாளை முன்னாள் தொகுதி செயலாளர் சரவணன், நாங்குநேரி வடக்கு ஒன்றிய செயலாளர் மலையன்குளம் சங்கரலிங்கம், நாங்குநேரி முன்னாள் நகர செயலாளரும், தெற்கு நாங்குநேரி ஊராட்சி மன்ற துணை தலைவருமான பி.எஸ். பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் முத்தூர் நயினார், தருவை செல்லத்துரை, கிருஷ்ணாபுரம் மாயா ரகுராமன் மாவட்ட பிரதிநிதி நல்ல பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 20 May 2022 2:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  5. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  7. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்