/* */

நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

2019 -2020 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு காட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
X

ஆதிதிராவிடர் நல பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் நல பள்ளியை சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 2019 -2020 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு காட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று வழங்கினார். தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.10000/-மும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.5000/-மும், ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்போது அதற்குரிய சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லம்மாள்புரம் டாக்டர் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நல்லம்மாள்புரம் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, துலுக்கர்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன், தலைமைஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 20 Jun 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  2. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  3. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  4. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  7. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  8. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  10. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!