/* */

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
X

ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு

இது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 1983-ன்படி கடலில் சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களான கூடுதாழை முதல், கூட்டப்புளி வரையுள்ள 7 மீனவ கிராமங்களில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையோ அல்லது அதனைச் சார்ந்த வளையமுள்ள வீச்சுவலையினை பயன்படுத்தியோ மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என இதன் மூலம் தெரிவிக்கலாகிறது.

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பொது இடங்களிலோ / இல்லத்திலோ / மீன்பிடி கலனில் இருந்தால் பறிமுதல் செய்யப்படும். மேலும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தால் மீனவர்களின் வள்ளம், வலை மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  2. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  3. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  4. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  7. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  8. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  10. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!