/* */

கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய்- மகன் நீரில் மூழ்கி பலி

கும்பிகுளம் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய்- மகன் நீரில் மூழ்கி பலியாகினர்.

HIGHLIGHTS

கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய்- மகன் நீரில் மூழ்கி பலி
X

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் ஊரைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் வயது 42. இவர் தனது மகன் சுபாஷ் வயது 11 இவரை கூட்டிக்கொண்டு அருகில், பயன்பாட்டில் இல்லாத கும்பிகுளம் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது மகன் சுபாஷ் கால் தவறி நீரில் விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன பேச்சு தாய், தனது மகன் சுபாஷ்சை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்துள்ளார். அப்போது மூச்சுத்திணறி பேச்சு தாயும் அவரது மகன் சுபாஷ் இறந்தனர்.

குளிக்கச் சென்ற பேச்சு தாயும், மகனும் வராததால் அவரது உறவினர்கள் கல்குவாரி குட்டைக்கு சென்றனர். அப்பொழுது பேச்சு உடைகள் கரையில் இருப்பதை கண்டு அருகில் தேடியுள்ளனர். அங்கு தேடியும் கிடைக்காததால் நீரில் மூழ்கி இருப்பார்கள் என சந்தேகித்து பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் தேடியுள்ளனர். பேச்சையும் அவரது மகன் சுபாஷ் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராதாபுரம் காவல்துறையினர் நேரில் வந்து பேச்சு தாய் மற்றும் அவரது மகன் சுபாஷ் ஆகியோரது உடல்களை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குட்டையில் தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...