/* */

சாலையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள்; ஆண்கள் சுய உதவிக் குழுவினர் அகற்றம்

திசையன்விளை, விஜய அச்சம்பாட்டில் பொதுமக்களுக்கு சிரமமாக இருந்த சீமை கருவேல மரங்களை ஆண்கள் சுய உதவி குழுவினர் அகற்றினர்.

HIGHLIGHTS

சாலையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள்; ஆண்கள் சுய உதவிக் குழுவினர் அகற்றம்
X

சீமை கருவேல மரங்களை ஜேசிபி மூலம் அகற்றும் ஆண்கள் சுய உதவி குழுவினர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாடு சாலையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகவும் இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில், இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற யாரும் முன்வராத நிலையில், விஜய அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்த "உதயா ஆண்கள் சுயஉதவிகுழு" மூலமாக நடவடிக்கை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து உதவிக்குழு ஆண்கள் தாங்களாக முன்வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் முதற்கட்டமாக சீமை கருவேல மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தர்மகண், பொங்கத்துரை, மணி குட்டி, சேர்மபாண்டி, ராஜலிங்கம், ஆகியோர் முன்னின்று செய்து முடித்தனர்.

அரசை எதிர்பார்க்காமல் இவர்கள் செய்த இந்த செயல் பொதுமக்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Updated On: 28 Aug 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...