/* */

கூடங்குளம் அருகே 50 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாக்களர்களுக்கு சப்ளை?

வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மதுபாட்டில்கள் சப்ளை செய்வதாக புகார் வந்தது.

HIGHLIGHTS

கூடங்குளம் அருகே  50 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாக்களர்களுக்கு சப்ளை?
X

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் மதுபான கடைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அடைக்கப்பட்டன. இந்த நிலையில் கூடங்குளத்தை அடுத்த சங்கநேரி கிராமத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கூடங்குளம் போலீசார் சங்கநேரி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது 3 பேர் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மது பாட்டில்கள் சப்ளை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்ற போது இருவர் தப்பி ஓடினர். ஜெபராஜ் என்பவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தப்பி ஓடிய சங்கநேரியை சேர்ந்தசங்கர் (31) மைக்கேல் ராஜ் (35) என 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  2. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  4. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  5. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  6. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  7. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  8. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  9. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  10. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!