/* */

ஏர்வாடி அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை திருடியவர் கைது

ஏர்வாடி அருகே வேப்பங்குளத்தில் கோவில் பூட்டை உடைத்து நகைகளை திருடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஏர்வாடி அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை திருடியவர் கைது
X

நெல்லை மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வேப்பங்குளம், அங்கு மேலூர் வடக்கு தெருவைச் சேர்ந்த அப்பாதுரை என்பவர் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வனப்பேச்சி அம்மன் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். கடந்த 02.07.2021 அன்று கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஒன்றரை பவுன் மதிப்புள்ள பொட்டு தாலியை மர்ம நபர் திருடி விட்டதாக ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்த நிலையில், கோவில் பூட்டை உடைத்து நகைகளை திருடியது அதே ஊரைச் சேர்ந்த ஆதிநாராயணன் (44) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஆதாம்அலி குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவரிடமிருந்து ஒன்றை பவுன் மதிப்புள்ள நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 23 Aug 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!