/* */

நெல்லை: கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

அடிதடி, வழிப்பறி .கொலை முயற்சியில் ஈடுபட்ட பணகுடி முருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

நெல்லை: கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில்  சிறையில் அடைப்பு
X

அடிதடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம், பணகுடி காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு வந்த பணகுடி தண்டையார்குளம் சுபாஷ் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் முருகன் என்ற குட்டமுருகன் (32) பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. அதனடிப்படையில் குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பணகுடி காவல் ஆய்வாளர் அருள் ஜார்ஜ் சகாய சாந்திக்கு அறிவுறுத்தினார்.

அதன் பேரில் குற்றவாளி முருகன் என்ற குட்ட முருகனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் 31.07.2021 இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 31 July 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!