Begin typing your search above and press return to search.
நெல்லை: காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
திசையன்விளையில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனாபாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கொரோனா கொடிய நோயிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஜி.ராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திசையன்விளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அலெக்ஸ் மேனன் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். ஏற்பாடுகளை, முன்னாள் கவுன்சிலர் ஏ.வி.ஜே.அல்பர்ட் செய்திருந்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.