Begin typing your search above and press return to search.
நெல்லை:பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
திசையன்விளையை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர், தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது. பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நகர தலைவர் ஜெகநாதன் தலைமையில் மாளவியா பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ் செல்வன்,மாவட்ட செயலாளர் குமார முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திசையன்விளையை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம், புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.