/* */

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4 பேர் கைது
X

நெல்லையில் காதல் போட்டியில் படுகொலை செய்யப்பட்ட அபினேஷ்

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியைச் சேர்ந்த மீனவர் சிலுவை கித்தேரியான் இவரது மகன் ஆன்றோ அபினேஷ் (20) இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்குமிடையே அவ்வப்போது முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஆன்றோ அபினேஷ்க்கும், சந்துருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆன்றோ அபினேசை சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஆன்றோ அபினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கூடன்குளம் போலீசார் இறந்த ஆன்றோ அபினேசின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்விற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து கூத்தென்குழி பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) , பிரதீஷ் (19), டென்னிஸ் (21), இருதையராஜ் (39) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 Aug 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி