Begin typing your search above and press return to search.
அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது கவனம் தேவை...
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்..
HIGHLIGHTS
அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது கவனம் தேவை என கொரோனா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்..
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் கட்டாயமாக அணிதல், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.