/* */

தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க போட்டி: நெல்லை எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்று எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை.

HIGHLIGHTS

தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க போட்டி: நெல்லை எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை
X

தமிழகஅரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்ற மாணவி அஸ்வதி மோகனை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.

தமிழக அரசு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் நடத்திய போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவி ரூ.1 லட்சம் வென்று சாதனை.

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்று சாதனை படைத்த நெல்லை வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவி அஸ்வதி மோகனை கல்லூரி நிறுவனர், முனைவர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் மாணவ-மாணவியர் மற்றும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில், கல்லூரியில் பயிலும் மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 2016 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயத் தொழில். ஸ்மார்ட் சிட்டி, ஹெல்த் கேர், ஃபின் டெக் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறை மாணவர்களின் கண்டுபிடிப்புகள், அதில் ஏற்படும் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும், மாணவர் குழுக்கள் தங்களது புதுமையான யோசனைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அண்ணாபல்கலைக்கழகம் நாகர்கோவில், ஸ்கேட் பொறியியல் கல்லூரி சேரன்மாதேவி, அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி, சென்னை ஆகிய இடங்களில் 3 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

திருநெல்வேலி மண்டலம் சார்பில் நடந்த மாணவர்களுக்கான இறுதிச்சுற்று போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவி அஸ்வதி மோகன் (ME இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்) கலந்து கொண்டார். அவர் சைபர் பாதுகாப்பு (CYBER SAFE) என்ற தலைப்பில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்தும், இணையதள நெட்வொர்க்கில் ஏற்படும் இடர்பாடுகளை களைவது, பாதுகாப்பது மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற அம்சங்களை கண்டுபிடித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த சாதனை படைத்த மாணவி அஸ்வதி மோகனுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதற்கு பெருமுயற்சி மேற்கொண்ட பொதுமேலாளர்கள் ஜெயகுமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், தொழில்முனைவோர் பயிற்சி துறை இயக்குநர் லூர்டஸ் பூபாலராயன், கணிப்பொறி துறை பேராசிரியர் அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் பரிசு பெற்ற மாணவி அஸ்வதி மோகன் ஆகியோரை கல்லூரி நிறுவனர், முனைவர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

Updated On: 11 May 2022 12:10 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!