/* */

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

மூலக்கரைப்பட்டியில் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
X

திருட்டு, வழிப்பறி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் குற்றவாளியான பாளையங்கோட்டை வட்டம் கருங்குளம் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் வானுமாமலை @ குரளி வானுமாமலை(34) என்பவர் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. அதன்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர், காளியப்பனுக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், 13.09.2021 இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 14 Sep 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?