/* */

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

HIGHLIGHTS

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
X

 நாங்குநேரி ஆர்.யூ.சி. மகாலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆர்.யூ.சி. மகாலில் காங்கிரஸ் கட்சி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வாழ்த்தி பேசினார். பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வின் மனைவி ரூபியின் பிறந்த நாள் விழாவையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.

விழாவில் மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் குளோரிந்தாள். கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் அமுதா கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் தனி தங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!