/* */

தாமிரபரணி நீர்நிலைகளை தூய்மைபடுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில், தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

தாமிரபரணி நீர்நிலைகளை தூய்மைபடுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
X

தாமிரபரணி நீர்நிலைகளை தூய்மைபடுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்

தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக,பல்வேறு தன்னார்வ அமைப்பினர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஜீவ நதியான தாமிரபரணி ஆறு பாபநாசத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை சென்று கடலில் கலக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உட்பட அதனைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பிரதான குடிநீருக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூய்மைப்படுத்தி, மீட்டெடுப்பதற்காக கடந்த காலங்களில் தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

அதனை மேலும் வலுபடுத்துவதற்காகவும், தாமிரபரணி தூய்மை படுத்துவதை ஒரு இயக்கமாக மாற்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக திகழ்வதற்கு நவீன மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி நீண்ட கால தொலைநோக்கு திட்டங்களை வகுத்து, செயல்படுத்துவதன் மூலம், தாமிரபரணி நதிநீரை மறு சீர்மைத்து புத்துயிர் அளித்து வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள முடியும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து முறையாக திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நதி சுற்றுவட்டாரப்பகுதியில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உதவி வருகிறது. கடைசியாக கடலில் கலக்கிறது.

கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியினை பலப்படுத்துதல், முட்புதர்களை அகற்றுதல், அமலச்செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக்கொண்டார். மேலும், 60 க்கும் மேற்பட்ட தன்னார்வக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பது மற்றும் தூய்மைப்படுத்துவது குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கண்காணிப்பு பொறியாளர் நீர்வள ஆதார அமைப்பு ஞானசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், துணை ஆட்சியர் பயிற்சி செல்வி மகாலெட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள், 60 க்கும் மேற்பட்ட தன்னார்வக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 July 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?