Begin typing your search above and press return to search.
கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் உலக மகளிர் தின விழா
உலக மகளிர் தினத்தையொட்டி கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் பேராசிரியர்கள் பெண்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்துள்ள கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் வணிக நிர்வாகவியல் உதவிப்பேராசிரியை தனலட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பூவலிங்கம் தலைமை உரையாற்றினார்.
ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்ட் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் ஜோஸ்பின் விமலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இந்த விளங்குவது குறித்து சிறப்புரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் செல்லம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை உலகம்மாள் நன்றியுரையாற்றினார். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்