/* */

நெல்லை- காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

அம்பாசமுத்திரம் மாவட்ட காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை- காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
X

மருந்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி மருத்துவ கடை உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் பேசும் போது மருத்துவரின் சரியான அறிவுரை இல்லாமல் மருந்து வாங்க வருபவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டாம். சானிட்டைசர் 50மில்லி அல்லது 100மில்லி பாட்டில்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். காய்ச்சல், சளி மாத்திரைகளை மருத்துவரின் சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் கொண்டு வரும் மருந்து சீட்டின் மருந்துகளை தங்கள் கடையில் போதுமான இருப்பு வைத்து கொண்டு தகுந்த நபர்களுக்கு வழங்க வேண்டும்.சானிட்டைசர் மற்றும் மருத்துவ மாத்திரைகளை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளது என தெரிவித்தார்.

Updated On: 29 May 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி