/* */

ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வேம்பையாபுரத்தில் சிறுத்தை ஒன்று ஆட்டை தூக்கி சென்றது.

HIGHLIGHTS

ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
X

வேம்பையாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டிதுரை(25). இவர் தனது வீட்டில் கொட்டகை அமைத்து ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது கொட்டகைக்குள் நூழைந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஆட்டை தூக்கி சென்றது. திடீரென இரவு நேரத்தில் ஆட்டின் சத்தம் தொடர்ந்து கேட்க வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது அங்கு கயிற்றில் கட்டி போட்டிருந்த ஆடு காணாமல் போனது தெரிய வந்தது.

தகவல் அறிந்ததும் பாபநாசம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வேம்பையாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று ஆட்டை வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது தெரிய வந்தது. வனப்பகுதிக்குள்ளிருந்து கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வேம்பையாபுரம் மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 7 May 2021 1:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்