/* */

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் கோவில்கள் மூடல்: பக்தர்கள் வேதனை

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் கோவில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் தொடர்ந்து ஆறு நாட்கள் மூடப்பட்டன.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் கோவில்கள் மூடல்: பக்தர்கள் வேதனை
X

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் பாபநாசர் சுவாமி திருக்கோவில் மற்றும் காரையார், சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்களில் மகாளய அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோயில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் மற்றும் உள்ளுர் பக்தர்கள் வருகை புரிவர்.

ஆனால் தற்பொழுது கொரொனா நோய் தொற்று காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் கோவில்கள் திறக்கப்படாத நிலையில் தற்போது மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் கோவில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் ஏற்கனவே கோவில்கள் அடைப்பு நடைமுறையில் உள்ளதால் தொடர்ந்து இன்று முதல் வருகின்ற 10ம் தேதி வரை ஆறு நாட்கள் கோவில்கள் அடைக்கப்படும் என்றும் இந்த நாட்களில் தாமிரபரணி ஆற்றில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையறியாமல் இன்று வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொடர்ந்து நோய்த் தொற்றை காரணம் காட்டி கோவில்கள் மூடப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Updated On: 5 Oct 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது