அம்பை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அம்பை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழப்பு
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளியில் கடந்த 25 ம் தேதி இரு பிரிவாக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அம்பை அருகேயுள்ள பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பள்ளாக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 25 -ந் தேதி இந்த பள்ளியில் 12 -ம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் 11 -ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே பெல்டால் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு மாணவருக்கு காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அந்த 12-ம் வகுப்பு மாணவன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பாப்பாக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Updated On: 30 April 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்