/* */

கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது

பத்தமடை பகுதியில் கூலிப்படைக்கு அரிவாள் விநியோகம் செய்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது
X

கைது செய்யப்பட்ட சுடலை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைக் குற்றங்களை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அரிவாள் பட்டறைகளை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து பட்டறை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் சுடலை(55) என்பவர் அரிவாள் பட்டறையில் கூலிபடையினருக்கு அரிவாள்கள் தயார் செய்யப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பத்தமடை பகுதியில் உள்ள சுடலை ஆசாரி என்பவரது பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூலி படையினருக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி பட்டறை உரிமையாளர் சுடலையை பத்தமடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Sep 2021 2:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  5. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  6. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  7. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  9. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  10. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!