குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை; தாய் உள்ளிட்ட இருவர் கைது

நெல்லையில் குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை செய்த தாய் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை; தாய் உள்ளிட்ட இருவர் கைது
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த தேவி(24). இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால், குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாக நெல்லை மாவட்டம், முக்கூடல் மயிலபுரத்தைச் சேர்ந்த வியாகம்மாள் மேரியிடம் முறையிட்டுள்ளார்.

அவர், தேவியின் 2 வயது குழந்தையான தர்ஷனாவை விற்பனை செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மயிலபுரத்தை சேர்ந்த ஜான் எட்வர்ட் மற்றும் அற்புதம் ஆகியோரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட தேவி, வியாகம்மாளிடம் குழந்தையை கொடுத்துள்ளார்.

மேலும் தேவியின் வயிற்றில் வளரும் ஆறுமாத கருவையும், மயிலப்புரத்தைச் சேர்ந்த அமலா பாத்திமா மற்றும் செபஸ்டின் ஆகியோருக்கு விற்க மார்கரெட் தீபா(29) ஒப்பந்தம் செய்திருப்பதாக திருநெல்வேலி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்க்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கடந்த 24ம் தேதி, முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுத்தமல்லி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அனிதா (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு விரோதமாக குழந்தையை விற்ற தேவி மற்றும் மார்க்ரெட் தீபா இருவரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 29 Aug 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  3. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  6. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  7. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  8. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  9. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  10. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்