/* */

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தனியார் லாட்ஜ் உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை

குற்றச்செயல்களை முன்கூட்டியே தடுப்பதற்காக தனியார் லாட்ஜில் உரிமையாளர்களிடம் காவல்துறை ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினர்.

HIGHLIGHTS

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தனியார் லாட்ஜ் உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை
X

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் அனைத்து தனியார் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு அறிவுரை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் வீ.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் காவல்துறை டிஎஸ்பி பிரான்சிஸ் கூறுகையில்:- தங்களுடைய லாட்ஜிக்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வரும் பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்னதாக லாட்ஜுக்கு தங்குவதற்காக வருபவரிடம் கண்டிப்பாக அவர்களுடைய அடையாள அட்டையை பெற வேண்டும்.

அனைத்து லாட்ஜ்களிலும் முன்புறம் மற்றும் வரவேற்பறை நடைபாதைகளில் சிசிடிவி கேமரா கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியிருந்தால் அவர்களை கண்காணிப்பு அதோடு காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதன் மூலம் குற்றம் நடக்கும் முன் தடுத்திடலாம். முன்னெச்சரிக்கை இருப்பது குறித்து தனியார் விடுதி உரிமையாளர்க்கு ஆலோசனை மட்டும் அறிவுரை கூறினார். இதில் தங்களின் கருத்துக்களை லாட்ஜ் உரிமையாளர்கள் டி.எஸ்.பி.யிடம் முன் வைத்தனர். ஆலோசனை கூட்டத்தில் கல்லிடை ஆய்வாளர் ராஜகுமாரி, வீகேபுரம் ஆய்வாளர் சீதாலெட்சுமி, அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. அன்னஜோதி உடன் இருந்தனர்.

Updated On: 11 Aug 2021 2:55 PM GMT

Related News