Begin typing your search above and press return to search.
உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
தமிழக முதல்வரின் நிவாரண நிதி உயிரிழந்த காவலர் பாண்டியராஜன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சாமுவேல் பாண்டியராஜன் கடந்த 09.03.2020-ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். பணியில் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதால் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை சாமுவேல் பாண்டியராஜன் மனைவி தங்க மலர்மதியிடம் வழங்கினார்.