/* */

அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் கைது
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமது மைதீன்(19), அவரது நண்பர்களுடன் நேற்று முன்தினம் ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மூக்கையா என்கிற நாகராஜன்(24) வழிமறித்து உங்களது பெயர் என்ன என கேட்டுள்ளார். முகம்மது மைதீன் மற்றும் அவரது நண்பர்கள் பெயரை கூறவும், மூக்கையா அவர்களை அவதூறாகப் பேசி, கீழே கிடந்த செங்கலால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து முகமது மைதீனின் தந்தை சேக் பீர்முகம்மது(54), கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முருகேஷ் விசாரணை மேற்கொண்டு செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூக்கையா என்கிற நாகராஜனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  7. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  9. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  10. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு