/* */

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

வீரவநல்லூர் அருகே கொலை நடந்த சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை

HIGHLIGHTS

நெல்லை அருகே  முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை
X

வீரவநல்லூர் அருகே கொலை  சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம்(40). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மாசானத்துக்கும் சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதத்தில், நேற்று இரவு மாடு மேய்த்து விட்டு, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை, ஊர் எல்லையில் மாசானமும் மற்றொருவரும் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது மாசானம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். வீரவநல்லூர் போலீசார் கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!