/* */

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக்கைதி : தனிப்படை போலீசார் கைது

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

HIGHLIGHTS

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக்கைதி : தனிப்படை போலீசார்  கைது
X

நெல்லையில் தனிப்படை போலீசாரால் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி பாச்சாத்து.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைத்தில் பதிவான வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கைதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையம் கெளதமபுரி கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் பச்சாத்து (72) என்பவர், அம்பை காவல் நிலைய (குற்ற எண் - 727/ 1992 U|S 302 ) வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதற்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல் முறையீடு காலத்தில் ஜாமீனில் வெளியில் இருந்து வந்தார். மேல் முறையீட்டு மனுவுக்கான தீர்ப்பில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளி பாச்சாத்து தலைமறைவாகி விட்டார். 1998 ஆம் ஆண்டிலிருந்து குற்றவாளி பச்சாத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று வரை நிலுவையில் இருந்து வந்தது.

இது பற்றி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. குற்றவாளியை கைது செய்து பிடியாணையை தாமதமின்றி நிறைவேற்ற தலைமறைவான கைதியைப் பிடிக்க வேண்டுமென, அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சந்திரமோகன்சைமன்சாம்பாகூர் மற்றும் காவல் துறையினர் சண்முகபாண்டியன், ராமர், பெருமாள், ராஜேஷ், மற்றும் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்தி தேடுதல் வேட்டையில் மேற்படி குற்றவாளி பாச்சாத்து(72) வை 29.08.2021 இன்று கைது செய்தனர். இதன் மூலம், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பிடியாணையை நிறைவேற்றி, குற்றவாளியை முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 29 Aug 2021 6:46 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!