/* */

தேசிய கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி பாராட்டு

தேசிய அளவில் 2ஆம் இடத்தை பிடித்து, பெருமை சேர்த்த மாணவர்களை நேரில் வரவழைத்து மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பாராட்டினார்

HIGHLIGHTS

தேசிய  கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி பாராட்டு
X

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியரை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டி ஊக்குவித்தார்.

சென்னையில் கடந்த ஜூலை 10ம் தேதி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், நெல்லை மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அகாடமி ஆப் டீம் 24 கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் தங்களது திறமையை வெளிபடுத்தி, தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார் .

மேலும், மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார். ‌ மேலும் குழந்தைகளுக்கு நன்கு பயிற்சி அளித்து தேசிய அளவில் இரண்டாம் பிடிக்க பயிற்சி அளித்த விஷ்ணுவர்தன் ஆசிரியரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.

Updated On: 30 July 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  2. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  3. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  4. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  6. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  7. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  8. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  10. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை