/* */

நவராத்திரி கொலு பூஜை வீட்டில் நகை திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது

கல்லிடைக்குறிச்சியில் நவராத்திரி கொலு வீட்டில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

HIGHLIGHTS

நவராத்திரி கொலு பூஜை வீட்டில் நகை திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது
X

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லிடைகுறிச்சி, மடவளாகம் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து (50) என்பவர் வீட்டில் 11.10.2021 அன்று நவராத்திரி கொலு பூஜை நடைபெற்றது.

மறுநாள் காலை பார்க்கும் போது பீரோவில் உள்ள 240 கிராம் தங்க நகைகளை காணவில்லை. நவராத்திரி கொலு காரணமாக திறந்து இருந்த வீட்டுக்குள் யாரோ மறைந்திருந்து இசக்கிமுத்து மற்றும் குடும்பத்தினர் தூங்கிய பின்னர் வீட்டுக்குள் மறைந்து இருந்தவர் பீரோவை திறந்து தங்க நகைகளை திருடி பின் வாசலை திறந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கல்லிடைகுறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி விசாரணை மேற்கொண்டதில், இசக்கிமுத்து வீட்டிலிருந்து நகைகளை திருடியது ஆலங்குளம், கிடாரக்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேல்சாமி(23) என்பது தெரியவந்தது.

மேற்படி காவல் ஆய்வாளர் வேல்சாமியை 04.12.2021 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் திருடிச் சென்ற 240 கிராம் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 4 Dec 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...