/* */

நெல்லை:இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் உலக மக்கள் நலம் பெற கூட்டு வழிபாடு

இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் உலக மக்கள் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து சம நிலைக்கு திரும்ப கூட்டு பிரார்த்தனை செய்தனர்

HIGHLIGHTS

நெல்லை:இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் உலக மக்கள் நலம் பெற கூட்டு வழிபாடு
X

இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

நெல்லை கிழக்கு மாவட்டம், பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட மணிமுத்தாறு குளம் கிராமத்தில் இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

மணிமுத்தாறு குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு முப்பிடாதி அம்மன் திருக்கோவிலில் வைத்து இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டில், உலக மக்கள் நலம் பெற வேண்டியும், கொரோனாவின் கோரப் பிடியில் உள்ள மக்கள் சம நிலைக்கு திரும்பவும் பிரார்த்தனை செய்தனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையில், இந்து முன்னணி பேரியக்கப் பொறுப்பாளரகள் மற்றும் கிராம மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Updated On: 25 July 2021 3:21 PM GMT

Related News