/* */

கல்லிடைக்குறிச்சி போலி எம்சாண்ட் ஆலை வழக்கு : முக்கியகுற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன்?

நெல்லைமாவட்ட எஸ்பிகுடியிருக்கும் வீடு சுற்றுசுவர் மணல் கடத்தல்காரர்களால் சீரமைப்பு செய்ததாக அப்போது சர்ச்சை எழுந்தது

HIGHLIGHTS

கல்லிடைக்குறிச்சி போலி எம்சாண்ட் ஆலை வழக்கு : முக்கியகுற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன்?
X

நெல்லை:

அம்பாசமுத்திரம் அருகே கல்லிடை குறிச்சியில் எம்சாண்ட் தயாரிக்க அனுமதிபெற்று மணல் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யபடாதது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

நெல்லைமாவட்டம்,கல்லிடை குறிச்சியில் எம்சாண்ட் தயாரிக்க அனுமதி பெற்று வண்டல் ஒடை ஆற்றில் மணல் திருடிய விவகாரத்தில், சேரன்மகாதேவி அப்போதைய சப் கலெக்டர் பிரதீக் தயாள் 9.57கோடி ரூபாய் அபராதம் விதித்தார். 10க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் . கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புள்ள மணல் திருடப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிவசங்கரன் என்பவர் தொடுத்த பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.


நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியதால் காவல்துறையில் புகார் செய்து வருவாய்துறையினர் நடவடிக்கை மேற் கொண்டனர்.மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தொடர்ந்து தலை மறைவாகவே உள்ளனர். மணல் கடத்தல் கும்பலின் உதவியால் மாவட்ட எஸ்பி குடியிருக்கும் வீடு,கம்பவுண்டு சுவர் உட்பட பல இலட்ச ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டதாகவும் அப்போது சர்ச்சை எழுந்தது.

புகார் கொடுக்கப்பட்டு (3/8/2020) வழக்குபதிவு செய்து ஒரு ஆண்டை நெருங்கி வரும் சூழலில் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. விசாரணையை வேகப்படுத்தி முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இதில் பல உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் தொடர்பு உள்ளது. அதனால் தான் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு கோடிக்கணக்கான மதிப்பில் கனிமவளங்களை திருடியவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 July 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...