/* */

நெல்லை-தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மரக்கன்று நடவுப்பணி துவக்கம்

சேரன்மகாதேவி தாமிரபரணி நதி கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை சார் ஆட்சியர் சிவா கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நெல்லை-தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மரக்கன்று நடவுப்பணி துவக்கம்
X

மரக் கன்றுகள் நடும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி. 

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலை பகுதியில் தாமிரபரணி நதியானது தொடங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கின்றது. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கிராம உதயம் சார்பில் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி மரக் கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில் கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார்.

கிராம உதயம் மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், சுமிதா, புவனேஷ்வரி மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், உறுப்பினர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

Updated On: 30 July 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்