/* */

வாகைபதியில் அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழா

வாகைகுளம் வாகைபதி ஸ்ரீ மன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி மாசி ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாகைபதியில் அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழா
X

வாகைகுளம் வாகைபதி ஸ்ரீ மன் நாராயண சுவாமி திருக்கோயிலில்,  அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி நடைபெற்ற ஊர்வலம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள வாகைகுளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில், அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி, மாசி மகா ஊர்வலம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கியது. இதற்காக 40க்கும் மேற்பட்ட பகுதியில் உள்ள பதிகளில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமன் காளை, கருடன், நாகம், உள்ளீட்ட பல்வேறு வாகனங்களில் வந்து திருநாமம் கிருஷ்ணன் கோவில் முன்பு சங்கமித்தது.

பின்னர் அங்கிருந்து வாகைகுளம் வாகைபதிக்கு அய்யாவின் அன்பு கொடி மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் அய்யாவின் அன்பு கொடி பக்தர்களும், சிறுவர்களும், பெரியோர்களும், அய்யா நாமத்தை முழங்கியபடியும், ஆண்கள், சிறுமிகள் கும்மி அடித்தும் சென்றனர்.

தொடர்ந்து வாகைகுளம் வாகைபதி குளத்தில் அய்யா புனித நீராடினார். ஊர்வலத்தில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அம்பாசமுத்திரம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 5 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  8. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  9. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’