/* */

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

HIGHLIGHTS

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
X

நெல்லை மாவட்டம் பத்தமடை அடுத்துள்ள கேசவன்சமுத்திரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

நெல்லை மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவன்சமுத்திரத்தை சேர்ந்த பாரத் என்பவர் நேற்று அப்பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு அவரது நண்பர் சந்தானத்துடன் சென்றுள்ளார். அப்போது சந்தானம் வேறு பாடல் போடுமாறு ரமேஷ் என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் ரமேஷுக்கும், சந்தானத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சண்டைக்கு பாரத் தான் காரணம் என்று அருகில் நின்று கொண்டிருந்த கேசவசமுத்திரத்தை சேர்ந்த செல்வம்(31), ஆயிரத்தான் என்ற முண்டகண்ணன் (26), குட்டி(24) மற்றும் ஆயிரத்தான்(29), ஆகியோர் அவரை அவதூறாக பேசி, கையால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாரத் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பொன்னுசாமி விசாரணை மேற்கொண்டு பாரத்தை அடித்து காயப்படுத்திய 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 27 Aug 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  2. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  4. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  5. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  6. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  9. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  10. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்