நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
X

நெல்லை மாவட்டம் பத்தமடை அடுத்துள்ள கேசவன்சமுத்திரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

நெல்லை மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவன்சமுத்திரத்தை சேர்ந்த பாரத் என்பவர் நேற்று அப்பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு அவரது நண்பர் சந்தானத்துடன் சென்றுள்ளார். அப்போது சந்தானம் வேறு பாடல் போடுமாறு ரமேஷ் என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் ரமேஷுக்கும், சந்தானத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சண்டைக்கு பாரத் தான் காரணம் என்று அருகில் நின்று கொண்டிருந்த கேசவசமுத்திரத்தை சேர்ந்த செல்வம்(31), ஆயிரத்தான் என்ற முண்டகண்ணன் (26), குட்டி(24) மற்றும் ஆயிரத்தான்(29), ஆகியோர் அவரை அவதூறாக பேசி, கையால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாரத் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பொன்னுசாமி விசாரணை மேற்கொண்டு பாரத்தை அடித்து காயப்படுத்திய 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 27 Aug 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?