Begin typing your search above and press return to search.
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் காணிகுடியிருப்பு பொதுமக்கள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணிகுடியிருப்பு மக்கள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் சப்கலெக்டர் (பயிற்சி)மகாலெட்சுமி ,அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் வெங்கட்ராமன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.