/* */

நெற்கதிர்கள் மூலம் வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு

நெற்கதிர்கள் மூலம் வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அம்பாசமுத்திரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் வயலில் வைத்து நெல் அறுவடையில் 100 சதவீதம் என எழுதி வயல்பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி சைக்கிள் பேரணி , மகளிர் சுய உதவி குழுக்கள் பேரணி , கோலப்போட்டி என பல்வேறு நிகழ்வுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களை கவரும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் விளையும் பூமியான அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமாக, நெல் அறுவடை நடக்கும் வயலில் நெற்கதிர் செடிகளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் கழுகுபார்வையில் பிரத்தியேக காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அதே வயல் பகுதியில் வைத்து வயலில் வேலை பார்த்த விவசாயிகள் , அப்பகுதி பொதுமக்களுக்கு வாக்குபதிவு இயந்திரம் வைத்து வாக்களிப்பது குறித்தும் , 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும் செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவீத வாக்குபதிவு சிறப்பு காட்சிகள் கழுகுப்பார்வையில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் , பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் இது வெகுவாக கவர்ந்துள்ளது.

Updated On: 9 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  2. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  6. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  7. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  8. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  9. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  10. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!