/* */

திருச்சி போலீஸ் கமிஷனர் மாற்றம் -புதிய ஆணையராக கார்த்திகேயன் நியமனம்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளருமான எஸ். கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள அருண் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


திருச்சி மாநகர போலீஸ் புதிய ஆணையாளராக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக உள்ள ஜி. கார்த்திகேயன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேபோல் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றி வரும் ஏ.ராதிகா சென்னை ஐ.ஜி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக புதிய டி. ஐ.ஜி.யாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ.சரவண சுந்தர் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 23 Sep 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?