/* */

29ம் தேதி திருச்சி மாநகரில் குடிநீர் கட், மாநகராட்சி ஆணையர் தகவல்

29ம் தேதி திருச்சி மாநகரில் குடிநீர் வராது என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

29ம் தேதி  திருச்சி மாநகரில்  குடிநீர் கட்,  மாநகராட்சி ஆணையர் தகவல்
X

திருச்சி மாநகர பகுதிகளில் 29ம் தேதி குடிநீர் வராது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் குடிநீர் பீடர் மின்பாதை பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 29.05.2021 அன்று ஒருநாள் குடிநீர் விநியோக இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் - மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் குடிநீர் பீடர் மின்பாதை பராமரிப்புபணிகள் 28.05.2021 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.

எனவே, ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மஹாலக்ஷ்மிநகர், நேருஜிநகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில்நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம்,

பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் இராணுவத்தினர் காலணி ,விவேகானந்தநகர், ஜே.கே நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்தியசிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலையப்பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும்

கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போநகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைபட்டிப்புதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான்நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் 29.05.2021 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது மறுநாள் 30.05.2021 அன்று வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 27 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?